• Sat. Jul 27th, 2024

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்

Aug 3, 2021

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெயின் பலன்கள் பின்வருமாறு:

  • சகலவிதமான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.
  • சமைக்கவும் அதன் இனிய மணத்துக்காகவும் மட்டுமே உபயோகிக்கிறோம். ஆதலால், எளிதாக கிடைக்கும் இந்த எண்ணெய்யின் மூலம் எண்ணற்ற பயன்களை பெறமுடியும்.
  • தேங்காய் எண்ணெய் இரண்டு அம்டங்கு ஒரு ‘மாய்ஸரஸர்’ ஆக செயல்படுவதால், சருமம் காய்ந்து போகாமல் இருக்கவும், வெடிப்புகளிலிருந்து தடுக்கவும், தேங்காய் எண்ணெயைத் தடவி பயனடையலாம்.
  • தேங்காய் எண்ணெய் ஷேவிங் க்ரீமாகவும் பயன்படும். முகத்தில் தடவி, லேசாக மசாஜ் செய்தபின் ரேஸரை உபயோகிக்கலாம். முகத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கமுடியும்.
  • தேங்காய் எண்ணெய், சளிக்கும் மூக்கடைப்புக்கும் சிறந்த நிவாரணி. ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்துவிட்டால், சளித்தொல்லை நீங்கும். மேலும் மூக்கின் மீதும், மூக்கின் உள்ளேயும் தடவினால், மூக்கடைப்பு நீங்கும்.
  • பற்கள் பளிச்சிட டூத் பேஸ்ட்டுகளோ பற்பசைகளோ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யை உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது தடவினால், சிறிது நாட்களிலேயே பற்கள் மின்னுவதைப் பார்க்கலாம். விரைவான பலனுக்கு கொஞ்சம் பேக்கிங்சோடாவையும் கலந்துகொள்ளலாம்.