• Fri. Jul 26th, 2024

விரைவில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்; பிரபல நாட்டில் புதிய அறிவிப்பு!

Jul 26, 2021

பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதோடு ஆம்பர் பிளஸ் பட்டியலிலிருந்து பிரான்ஸ் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்பொழுது பிரித்தானியாவுக்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவர் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட உடன் அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பீட்டா வகை கொரோனா வைரஸ் பிரான்சில் சுமார் 3.7 சதவீதம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரீயூனியன் தீவில் பீட்டா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதேவேளை ரீயூனியன் தீவில் உள்ள தொற்றையும், பிரான்சில் உள்ள தொற்றையும் பிரித்தானிய அதிகாரிகள் குழப்பிக் கொண்டார்களா என நிபுணர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரான்ஸ் “ஆம்பர் பிளஸ்” பட்டியலிலிருந்து ஆம்பர் பட்டியலுக்கு விரைவில் மாற்றப்படும் என நம்புவதாக கூறியுள்ளார்.