• Fri. Jul 26th, 2024

இங்கிலாந்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் மருத்துவர் திருக்ஷிகா!

Sep 27, 2021

இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது நோயாளிகளிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இலங்கையில் பிறந்த பெண் மருத்துவருக்கு கடலில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்ட நோயாளிகளிற்கு அர்ப்பணிப்புடன் சிகிச்சை வழங்கிய இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவர் நீச்சலில் ஈடுபட்டவேளை உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருக்ஷிகா சத்தியலிங்கம் 26 வயது மருத்துவர் இங்கிலாந்தின் மார்கேட்டில்நள்ளிரவில் நீச்சலிற்கு சென்றுள்ளார் – பின்னர் அவரின் உடலையே மீட்கமுடிந்தது.

கடந்த 11 ம் திகதி சனிக்கிழமை காலை அவரது நண்பர் ஒருவர் எச்சரிக்கை செய்ததை தொடர்ந்து எல்லைகாவல் பிரிவை சேர்ந்தவர்கள் தேடுதலில் ஈடுபட்டு அவரது உடலை மீட்டனர்.

நண்பர்களுடன் திருசிகா நீச்சலில் ஈடுபடுவதற்கு சென்றுள்ளார் அவர் திரும்பிவராததை நண்பர்கள் கவனிக்க தவறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்ததும் உயிர்காக்கும் படகுகுழுவினர் பொலிஸார் தீயணைப்புபடைவீரர்கள் ஹெலிக்கொப்டரின் உதவியுடன் கடலோர காவல்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதனை தொடர்ந்து திருசிகாவின் உடல் துறைமுகபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
QEQMஇல் மயக்கமருந்து பிரிவில் ஆலோசகராக பணியாற்றிய தந்தை சத்தியலிங்கம் தனது மகள் குறித்து உருக்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

ஓவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையே சிறந்தது என நினைக்கின்றனர் ஆனால் உண்மையிலே அவள் சிறந்தபிள்ளை என தந்தை தெரிவித்துள்ளார்.

அவளது இறப்பிற்கு பின்னரே அவள் எவ்வளவு சிறப்பான ஆலோசனைகளை வழங்கினால் எவ்வளவு புத்திசாலி என்பதை உணர்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மகள் எப்போதும் ஏனையவர்களை செவிமடுக்க தயாராகயிருந்தால் தனது நோயாளிகளை பராமரிப்பதை அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதை விருப்பத்துடன் செய்தாள் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் போது பாதிக்கப்பட்டவர்களிற்கு சுவாசப்பிரிவில் சிகிச்சை மகள் சிகிச்சை வழங்கினால் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.

அவர்களிற்கு ஆறுதல் அளிப்பதற்காக அவர்களின் கையை பிடித்தபடி உரையாடிக்கொண்டிருப்பார் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.

ஏதாவது தவறு என்றால் மருத்துவஆலோசகர்களை தொடர்புகொள்வதற்கு மகள் தயங்கியதில்லை மகள் தனது தொழில்குறித்து ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார் எனவும் தந்தை தெரிவித்துள்ளார்.

நண்பர்களால் திரு என அழைக்கப்படும் அவர் இலங்கையில் பிறந்தவர் சிறுவயதில் இல்போர்ட்டில் வாழ்ந்த பின்னர் 2011 இல் கென்டில் வசிக்க தொடங்கினார்.

ரொஜெர் மன்வூட்டில் பாடசாலை கல்வியை முடித்த அவர் லட்வியாவின் ரிகா ஸ்டிரடின்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவகல்வியை பூர்த்தி செய்துள்ளார்.

அங்கு அவர் தனது காதனை சந்தித்தார் இருவரும் ஆறு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர்.
அதன் பின்னர் அவர் QEQMஇல் பணிபுரிய தொடங்கினார். இதேவேளை உயிரிழந்த திருசிகாவின் சகோதரர் கௌசல்யனும் ஒரு மருத்துவர் ஆவார்.