• Wed. Apr 17th, 2024

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து

Feb 28, 2022

மும்பை – காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து 2-ம் நிலை தீ விபத்து என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.