• Fri. Jul 26th, 2024

கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறி விடுங்கள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை

Mar 2, 2022

பஸ், ரெயில் வசதி இல்லை என்றாலும் கூட கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறுமாறும் பெசோஷின், பபாயி உளிட்ட நகரங்களுக்கு இந்தியர்கள் உடனடியாக சென்று விடுமாறு இந்திய தூததரகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று இரவு 9.30க்குள் கார்கிவில் இருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டுமென 2-வது முறையாக இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கார்கிவில் ரஷிய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உடனடியாக இந்தியர்கள் வெளியேற ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.

போர் நடைபெற்று வரும் பகுதிகளில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவுமாறு ரஷியா, உக்ரைன் தூதர்களிடம் வலியுறுத்தி உள்ளது.

கார்கிவ் நகரில் இருந்து ரெயில் மூலம் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல விடாமல் உக்ரை போலீசார் தடுப்பதாக மாணவர்கள் புகார் அளித்தனர்.

ரெயில், பஸ் போன்றவற்றை பயன்படுத்த உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.