• Sat. Jul 20th, 2024

திறந்த மேடையில் பேசிய காஷ்மீர் கவர்னர்

Oct 25, 2021

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதனை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பல பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் ஸ்ரீநகரில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றார்.

அமித்ஷா பேசுவதற்கு முன்னர் காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பேசுவதற்காக மேடையில் ஏறினார்.

அப்போது, பேசுவதற்கான மேடையில் கவர்னர் பாதுகாப்பிற்காக குண்டுதுளைக்காத கண்ணாடியிலான பாதுகாப்பு அரண் வைக்கப்பட்டிருந்தது.

இதனை கவனித்த கவர்னர் மனோஜ் சின்ஹா தனது பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த குண்டுதுளைக்காத பாதுகாப்பு அரணை அகற்றுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

தொடர்ந்து குண்டுதுளைக்காத பாதுகாப்பு அரணான கண்ணாடியை அதிகாரிகள் அகற்றினர். அதன் பின்னர் அவர் திறந்த மேடையில் மக்கள் முன்னிலையில் உரையாடினார்