• Tue. Apr 16th, 2024

இலங்கைத் தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் சிறப்பு நடவடிக்கைகள்

Aug 27, 2021

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் முகாம்களில் வசிப்பவர்களின் 7,469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி செலவில் மீள் நிர்மாணம் செய்து கொடுக்கப்படும் என்றும், அவர்கள் குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதகாவும் அறிவித்தார்.

மேலும் இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூபாய் 2,500 லிருந்து 10,000 ரூபாய் ஆகவும், கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு ரூபாய் 3,000 இல் இருந்து ரூபாய் 12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூபாய் 5,000 இல் இருந்து ரூபாய் 20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.