• Thu. Mar 28th, 2024

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய தடை

Oct 18, 2021

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் திருவண்ணாமலையில் இந்த மாதம் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை காரணமாக அக்டோபர் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21ஆம் தேதி இரவு 12 மணிவரை கிரிவலம் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கோவில்கள் திறக்க அனுமதி அளித்த தமிழக அரசு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது.