• Sat. Jul 20th, 2024

மாணவனுடன் ஓட்டமெடுத்த ஆசிரியை – போலிசார் வலைவீச்சு

Jun 5, 2021

இணையவழி வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பாடசாலைகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு இணையவழி மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காணாமல் போனதாக மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அவர்களது புகாரில் 17 வயதான மகன் தேஸ்ராஜ் காலனியிலுள்ள ஆசிரியரின் வீட்டில் தினமும் 4 மணி நேரம் பாடம் கற்றுக்கொள்ள செல்வது வழக்கம்.

இந்நிலையில் பாடம் கற்க சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஆசிரியை கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆசிரியையும் காணாமல் போனது அம்பலமான நிலையில், பொலிசார் இருவரையும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் வீட்டை விட்டு சென்ற இருவரும் பணம், நகை என்று எதையும் எடுத்துச்செல்லவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்தோடு தற்போது அவர்களின் மொபைல் போன் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.