• Sun. Jul 21st, 2024

பாகிஸ்தானின் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் அடக்கம்

Dec 8, 2021

பாகிஸ்தானின் சியல்கோட்டில் தீவிரவாதக் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த பிரியந்த குமார தியவதன உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரது இல்லத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

அதேவேளை அவரது திடீர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பிரியந்தவின் சடலம் கணேமுல்ல பொல்ஹேன மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.