• Wed. Apr 17th, 2024

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை

Nov 9, 2021

இலங்கைக்கு மேல் உள்ள மழையுடனான வானிலையானது இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவுள்ளது.

வட, வட-மேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அநுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகக் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மாத்தளை, பொலன்னறுவை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவுக்கு மேலாக அடுத்த 24 மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.