• Fri. Jul 26th, 2024

யாழில் ஹெரோயின் வியாபாரத்தில் சிறுமியும் தாயும் !

Feb 22, 2022

யாழ்ப்பாணம் நெல்லியடி குடவத்தை பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 13 வயது சிறுமியும் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் மீட்க்கப்பட்டுள்ளது.

காவலுக்கு ஆட்களை வைத்து வருபவர்களை அடையாளம் கண்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.