![](https://tamil4.com/wp-content/uploads/2021/10/accident.jpg)
யாழ்ப்பாணம் ஏ – 09 நெடுஞ்சாலையில் தென்மராட்சியின் உஷன் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, பளையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன் மோதியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.
பட்டா ரக வாகனத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த வர்த்தக நிலையத்துக்குள் புகுந்துள்ளது.
இதன் போது பலமாக அடிபட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த இன்னொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.