• Thu. Apr 18th, 2024

யாழில் போலீசாருக்கே வெளிநாட்டு மதுபானம் விற்க முயன்ற நபர்!

Jun 11, 2021

யாழில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், யாழ்ப்பாணம்- ஆறுகால்மடம் பகுதியில் வைத்து நேற்று(10) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபருக்கு தொடர்பு கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் தேவை எனத் தெரிவித்து ஆறுகால்மடம் பகுதிக்கு அழைத்துள்ளனர்.

அதையடுத்து குறித்த நபர் அதிகளவு விலைபேசி 6 மதுபானப் போத்தல்களுடன் வருகை தந்து அவற்றை சிவில் உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு விற்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.