![](https://tamil4.com/wp-content/uploads/2022/03/New-Project-35.jpg)
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக சபதம் எடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் அணி இன்று நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தின் போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்க்கை செலவு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜபக்ஷ சகோதரர்களை இலங்கையின் பொருளாதார நிலைமை படாதபாடு படுத்தி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அரசாங்கத்தை அதாள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
எரிபொருள், எரிவாயு பிரச்சினை நீண்டு கொண்டிருந்த நிலையில், சில தினங்களாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன் காரணமான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து மக்களின் வாழ்வில் பெரும் இடியாக மாறியுள்ளது.