• Fri. Mar 29th, 2024

பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்கும்படி கோரிக்கை

Jun 6, 2021

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை வரும் 21ம் திகதி வரை நீட்டிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையின் முக்கிய தரப்பினர் 3 பக்க கடிதங்களை அனுப்பி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகிறது.

இதேவேளை நாளையுடன்(07) நிறைவடைய இருந்த பயணக் கட்டுப்பாடு வரும் 14ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.