• Sat. Oct 19th, 2024

யாழ்.மட்டுவிலில் பதற்றமான சூழல் – இராணுவம் குவிப்பு

Jun 9, 2021

யாழ்.மட்டுவில் – பன்றித்தலைச்சி அம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் இன்று(09) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டியதால் பிரதேசத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்காக ஆட்களை ஏற்றிவந்த பேருந்து மட்டுவில் பகுதியில் முதியவர் ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் கூடிய மக்கள் பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து பிரதேசத்தில் கலகம் தடுக்கும் தயர்ப்படுத்தலுடன் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன், பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சிலர் இராணுவத்தால் துரத்திப் பிடிக்கப்பட்டனரெனவும் கூறப்படுகின்றது.