• Tue. Oct 22nd, 2024

ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும் – அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

Aug 26, 2021

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதும் பொதுமக்கள் ஊரடங்கை மதிக்காமல், சுகாதார நடைமுறைகளை மீறினால் ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்திருந்தார். தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை முறையாக செயற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அப்படி இல்லையாயின் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும். இல்லை என்றால் மீண்டும் ஒரு மாதத்தில் ​நாட்டை முடக்க வேண்டி ஏற்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.