திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://tamil4.com/wp-content/uploads/2021/06/இராணுவத்-தளபதி-சவேந்திர-சில்வா.jpg)
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை உறுதிசெய்தார்.
அதற்கமைய வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்று பரவி வருகின்ற தகவல்களில் உண்மை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.