• Fri. Apr 19th, 2024

யாழில் பிள்ளையாருக்கு நேர்ந்த கதி!

Jun 8, 2021

யாழ்.மிருசுவில் பகுதியில் வீதியோரமாக அமைந்திருந்த சிறிய பிள்ளையார் கோவில் நேற்றைய தினம்(07) இரவு விசமிகள் சிலரால் இடிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் – மிருசுவில் இடையில் சிறிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் மக்கள் அவதானித்தபோது ஆலயம் இடிந்து காணப்பட்டதை அடுத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.