• Mon. Jul 22nd, 2024

குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி

Nov 2, 2021

பிரேசில் நாட்டில் குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ என்ற மாகானத்தில் உள்ள அல்டினோபொலிச் நகரில் டுஸ் போகஸ் குகையில் தீயணைப்பு வீரர்க்ள் மொத்தம் 26 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது குகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை மீட்டுள்ளனர். மீதி 9 பேர் நிலை என்ன ஆனது எனத் தெரியாததால் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.