• Sat. Apr 13th, 2024

அமெரிக்க ராணுவத்திடம் தமது குழந்தைகளை ஒப்படைக்கும் ஆப்கன் மக்கள்

Aug 21, 2021

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த நாட்டிலிருந்து வெளியேறிய பலர் முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படிப்படியாக அமெரிக்க இராணுவம் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்திடம் ஆப்கன் மக்கள் தங்கள் குழந்தைகளை கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

எங்களது உயிர் போனால் கூட பரவால்ல எங்களது குழந்தைகளாவது நன்றாக இருக்கட்டும் என்று அமெரிக்க ராணுவத்திடம் பொதுமக்கள் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த உருக்கமான செய்தியை ஆஃப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அமெரிக்காவுக்கு வரும் ஆப்கன் மக்களின் குழந்தைகளை பாதுகாக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.