• Thu. Apr 18th, 2024

இலண்டனின் பிரம்மாண்டம் – ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

Sep 1, 2021

கிழக்கு இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழாவானது கொரோனாத் தொற்றின் பின்பு பல்லாயிரக்கான மக்களோடு மிகப்பிரம்மாண்டமாக எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் இவற்றுடன் ராகாஸ் இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது. எமது கலைஞர்களின் பக்திப் பாடல்களைக் கேட்கத் தவறாதீர்கள். அன்றைய தினம் கோவிலைச் சுற்றி இலவச வாகனத் தரிப்பிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர் ஆலய நிர்வாகத்தினர்.

அது மட்டுமல்ல அடியவர்களின் தாக சாந்திக்காக தண்ணீர் , மோர்ப்பந்தல்கள் மற்றும் மதிய வேளை அன்னதானமும் இடம் பெறவுள்ளது.

பல வியாபார நிறுவனங்களின் மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளது. கற்பக விநாயகரின் அருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியர்கள்.