• Fri. Jul 26th, 2024

பிரிட்டனில் ஐந்து வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி

Jan 31, 2022

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகம் நிறைந்த 5 -11 வயது சிறுவா்களுக்கு பொது சுகாதார அமைப்பு விரிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், அந்த நோயால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் நிறைந்த 5 முதல் 11 வயது சிறுவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

சா்க்கரை நோய், நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்ற குறைபாடுகளைக் கொண்ட சிறுவா்களும் இதில் அடங்குவா்.

இந்த புதிய அறிவிப்பின் மூலம், சுமாா் 5 லட்சம் சிறுவா்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதி பெறுகின்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.