• Tue. Jul 23rd, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 17 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

Sep 17, 2021

செப்டம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 260 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 261 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 105 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார்.

1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது.

1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.

1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1787 – ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.

1795 – மேஜர் பிரேசர் தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றின.

1809 – பின்லாந்து போரில் சுவீடனுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து உருசியாவிடம் கையளிக்கப்பட்டது.

1811 – சாவகம் பிரித்தானியாவிடம் வீழ்ந்தது.[1]

1849 – அமெரிக்க செயற்பாட்டாளர் ஹேரியட் டப்மேன் அடிமை நிலையில் இருந்து தப்பினார்.

1858 – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழ்கடல் தொலைத்தந்திக் கம்பிகள் தணக்காய் முனைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பதிக்கப்பட்டன.[2]

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர்.

1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): யாலு ஆற்றில் மிகப் பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.

1900 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: மாபிட்டாக் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கரைத் தோற்கடித்தன.

1908 – ரைட் சகோதரரினால் செலுத்தப்பட்ட வானூர்தி தரையில் மோதியதில் தோமசு செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.

1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.

1930 – குர்தியரின் அரராத் கிளர்ச்சியை துருக்கி முறியடித்தது.

1939 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தின் போலந்து படையெடுப்பு ஆரம்பமானது.

1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்று நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியால் தாக்கி அழிக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியத்தில் கட்டாய இராணுவப் பயிற்சி மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.

1941 – ஈரான் மீதான ஆங்கில-சோவியத் படையெடுப்பு: சோவியத் படைகள் தெகுரான் நகருள் நுழைந்தன.

1944 – மார்க்கெட் கார்டன் நடவடிக்கை: நேசப் படைகளின் வான்படையினர் வான்குடைகள் மூலம் நெதர்லாந்தில் தரையிறங்கின.

1944 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனிப் படைகள் சான் மரீனோ போரில் நேசப் படைகளால் தாக்கப்பட்டனர்.

1948 – ஐதராபாத் நிசாம் மரபினர் ஐதராபாத் இராச்சியம் மீதான தமது இறைமையைக் கைவிட்டு இந்திய ஒன்றியத்தில் இணைந்தனர்.

1949 – டொரோண்டோ துறைமுகத்தில் நொரோனிக் என்ற கனேடியக் கப்பல் எரிந்ததில் 118 பேர் உயிரிழந்தனர்.

1965 – பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.

1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1978 – இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1980 – நிக்கராகுவாவின் முன்னாள் அரசுத்தலைவர் அனாஸ்தாசியோ டெபாயில் பரகுவையில் படுகொலை செய்யப்பட்டார்.

1987 – தமிழ்நாட்டில் வன்னியர் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1988 – தென் கொரியாவின் சியோல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாயின.

1991 – எசுத்தோனியா, வட கொரியா, தென் கொரியா, லாத்வியா, லித்துவேனியா, மார்சல் தீவுகள் மைக்குரோனீசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.

1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

2011 – வோல் வீதி ஆக்கிரமிப்பு இயக்கம் நியூயார்கில் ஆரம்பமானது.