• Sat. Jul 20th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 02

Aug 2, 2021

ஆகத்து 2 கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது.

கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது.

1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் போது என்றி அட்சன் இன்றைய அட்சன் விரிகுடாவை அடைந்தார்.

1776 – அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் ஒப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது.

1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.

1830 – பிரான்சின் பத்தாம் சார்லசு மன்னர் முடிதுறந்தார். அவரது பேரன் என்றி மன்னராக முடிசூடினார்.

1858 – இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

1870 – உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது.

1916 – முதலாம் உலகப் போர்: லியனார்டோ டா வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆத்திரியாவினால் தாரந்தோவில் மூழ்கடிக்கப்பட்டது.

1918 – கனடிய வரலாற்றில் முதல் தடவையாக பொது வேலைநிறுத்தம் வான்கூவர் நகரில் இடம்பெற்றது.

1922 – சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1932 – பாசிட்ரான் (இலத்திரனின் எதிர்மின்னி) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1934 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவரானார்.

1937 – ஐக்கிய அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும் அதன் துணை விளைபொருட்களும் தடைசெய்யப்பட்டன.

1939 – அணுவாயுதத்தை தயாரிக்க உதவும் மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படகு ஒன்று சப்பானியக் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. லெப். ஜான் எஃப். கென்னடி (பின்னாளைய அமெரிக்க அரசுத்தலைவர்) உயிர் தப்பினார்.

1943 – போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாட்சிகளுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. இவ்வதைமுகாமில் 18 மாதங்களில் 900.000 கைதிகள் கொல்லப்பட்டனர்.

1944 – சோசலிச மக்கெடோனியக் குடியரசு உருவானது.

1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நேச நாடுகளின் பொட்ஸ்டாம் உச்சி மாநாடு நிறைவடைந்தது.

1947 – புவனெசு ஐரில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற பிரித்தானிய தென்னமெரிக்க அவ்ரோ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் சிதைவுகள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன.

1968 – பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.

1973 – மான் தீவில் டக்லசு நகரில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.

1980 – இத்தாலியில் பொலோனா தொடருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

1985 – டெல்ட்டா ஏர்லைன்சு 191 விமானம் டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.

1989 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பில் மீண்டும் இணைந்தது.

1989 – 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.

1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.

1999 – இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.

2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் நுழைந்தனர்.

2014 – சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 146 பேர் உயிரிழந்தனர்.