• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 03

Aug 3, 2021

ஆகத்து 3 கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.

435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.

881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார்.

1057 – ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார்.

1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.

1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.

1678 – அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது.

1795 – அமெரிக்காவில் வடமேற்கு இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.

1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார்.[1]

1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: அரா என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.

1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.

1936 – உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.

1946 – உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1949 – அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.

1959 – போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.

1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1977 – உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது தனி மேசைக் கணினிகளில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.

1990 – கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

2005 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

2010 – பாக்கித்தான், கராச்சியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.

2014 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.

2018 – ஆப்கானித்தானின் கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.

2019 – அமெரிக்கா, டெக்சாசு மாநிலத்தில் எல் பாசோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.