• Tue. Jul 23rd, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 18

Aug 18, 2021

ஆகத்து 18 கிரிகோரியன் ஆண்டின் 230 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

684 – மார்ச் ராகித் சமரில் உமையா கலீபகப் பிரிவினைவாதிகள் இப்னு அல்-சுபைர் ஆதரவாளர்களைத் தோற்கடித்து, உமையாதுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவைக் கைப்பற்றினர்.

1487 – காசுட்டீலிய, அராகன் படைகள் மாலகா நகரை முற்றிறுகையிட்டுக் கைப்பற்றின.

1572 – புரட்டத்தாந்து, கத்தோலிக்கத் திருச்சபைகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக நான்காம் என்றி மன்னருக்கும் மார்கரெட்டுக்கும் பாரிசில் திருமணம் நடைபெற்றது.

1587 – அமெரிக்காக்களில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது.

1590 – அமெரிக்காவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கள் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார்.

1634 – பிரான்சின் லவ்டுன் நகரில் மாந்திரீகக் குற்றங்களுக்காக உரைன் கிராண்டியர் என்பவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.

1783 – பெரிய பிரித்தானியா எங்கும் பெரும் எரிவெள்ளி அவதானிக்கப்பட்டது.

1868 – இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.

1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஈலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

1891 – மர்தினிக்கு தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் உயிரிழந்தனர்.

1914 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு பேரரசர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் பெயரை பெத்ரோகிராது என மாற்றினார்.

1917 – கிரேக்கத்தில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.

1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

1938 – அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும் சென் லாரன்சு ஆற்றின் மேலாக ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையின் ஒரு பகுதியாக பெரும் வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யூலியன் லாகூட் வலதுசாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

1958 – விளாதிமிர் நபோக்கொவின் சர்ச்சைக்குரிய லொலிதா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

1965 – வியட்நாம் போர்: அமெரிக்கக் கடற்படை வியட்கொங் படைகளின் தளம் ஒன்றை தாக்கி அழித்தது.

1971 – வியட்நாம் போர்: ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன.

1977 – ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கடுங்காயங்களால் இறந்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிக்கொணரப்பட்டன.

1983 – அமெரிக்காவில் டெக்சஸ் கரையில் அலீசியா சூறாவளி தாக்கியதில், 21 பேர் உயிரிழந்தனர்.

2008 – பாக்கித்தானில் அரசுத்தலைவர் பெர்வேஸ் முஷாரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவர் பதவியைத் துறந்தார்.