• Sat. Jul 20th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 26

Aug 26, 2021

ஆகத்து 26 கிரிகோரியன் ஆண்டின் 238 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 239 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர்.

1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.

1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான்.

1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார்.

1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது.

1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் கப்பலில் ஆரம்பித்தார்.

1789 – பிரான்சியப் புரட்சி: மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை பிரான்சிய நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1791 – நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.

1795 – திருகோணமலை, பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.[1]

1814 – சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.

1883 – இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: 20-நாள் முற்றுகையை அடுத்து, செருமானியக் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரான்சிய, பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தது.

1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அரசியலமைப்பின் 19-வது திருத்தச்சட்டமூலம் அமுலுக்கு வந்தது.

1922 – கிரேக்க-துருக்கியப் போர் (1919–22): துருக்கிய இராணுவத்தினரின் பெரும் தாக்குதல்களில் கிரேக்கத்தின் முக்கிய பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன.

1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாட்சி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர். இப்படுகொலைகள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சார்லஸ் டி கோல் பாரிசினுள் நுழைந்தார்.

1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது.

1970 – ஐக்கிய அமெரிக்காவில் புதிய பெண்ணிய இயக்கம் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி பணி நிறுத்தங்களில் ஈடுபட்டது.

1972 – 22வது ஒலிம்பிக் போட்டிகள் செருமனி, மியூனிக்கில் ஆரம்பமானது.

1977 – பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் கியூபெக் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1978 – அல்பீனோ லூசியானி முதலாவது அருளப்பர் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1978 – முதலாவது செருமனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

1993 – யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

1997 – அல்சீரியாவில் 60-இற்கு மேற்பட்டோர் பென் அலி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

1999 – உருசியக் குடியரசான தாகெஸ்தானை இசுலாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியதற்குப் பதிலடியாக, உருசியா இரண்டாவது செச்சினியப் போரை ஆரம்பித்தது.

2006 – திருகோணமலை மூதூர் கிழக்கில் இலங்கை விமானப்படைப் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர்.