• Wed. Jul 24th, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 8

Dec 8, 2021

டிசம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 342 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 343 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 23 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1609 – இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.

1825 – முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைசு) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்தது.

1854 – இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரம் ஒன்பதாம் பயசு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டது.

1881 – ஆத்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 380 பேர் உயிரிழந்தனர்.

1907 – ஐந்தாம் குசுத்தாவ் சுவீடன் மன்னராக முடிசூடினார்.

1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை போக்லாந்து தீவுகளில் இடம்பெற்ற போரில் செருமனியக் கடற்படையைத் தோற்கடித்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் சாங்காய், மலாயா, [தாய்லாந்து]], பிலிப்பீன்சு, இடச்சு கிழக்கிந்தியா ஆகியவற்றின் மீது ஒரே நேரத்தில் தாக்குதலை ஆரம்பித்தன.

1941 – பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை சப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா சப்பான் மீது போரை அறிவித்தது.

1941 – பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு சப்பான் மற்றும் செருமனி மீது போரை அறிவித்தது.

1941 – பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.

1942 – பெரும் இன அழிப்பு: உக்ரைனின் “டேர்னோப்பில்” என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் படையினர் கிரேக்கத்தில் மதப்பள்ளபொன்றைத் தாக்கி அங்கிருந்த மதகுருக்கள் உட்பட 22 பேரைப் படுகொலை செய்தனர்.

1953 – ‘அணு அமைதிக்கே’ என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.

1963 – மேரிலாந்தில் அமெரிக்க விமானம் ஒன்று மின்னலால் தாக்கப்பட்டு வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.

1966 – எரக்கிளியோன் என்ற கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஏஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் உயிரிழந்தனர்.

1969 – கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்தனர்.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.

1972 – சிகாகோவில் போயிங் 737 விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் உயிரிழந்தனர்.

1974 – கிரேக்கத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மன்னராட்சியை இல்லாதொழிக்க மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.

1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1982 – சுரிநாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.

1985 – சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

1987 – பனிப்போர்: நடுத்தர-வீச்சு அணுவாயுதங்கள் தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்டு ரேகனும் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவும் வெள்ளை மாளிகையில் கையெழுத்திட்டனர்.

1987 – பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.

1988 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் ஏ-10 தண்டபோல்ட் 2 விமானம் செருமனியில் குடிமனைப் பகுதியில் வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதெனவும், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் என்ற அமைப்பை உருவாக்குவதெனவும் உருசியா, பெலருஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

1998 – அல்சீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

2004 – தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் உருவானது.

2010 – எசுபேசுஎக்சு என்ற தனியார் நிறுவனம் பால்கன் 9 விண்கலத்தை இரண்டாவது தடவையும், டிராகன் விண்கலத்தை முதலாவது முறையும் விண்வெளிக்கு ஏவியது.

2010 – சப்பானின் கார்க்கோசு விண்கலம் வெள்ளி கோளை 80,800 கிமீ தூரத்தில் கடந்தது.

2013 – லிட்டில் இந்தியா கலவரம்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.