• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 9

Dec 9, 2021

டிசம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.

1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.

1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. பிரித்தானியா விரைவில் வர்ஜீனியாவில் இருந்து வெளியேறியது.

1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினெர்வா” நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது.

1828 – இலங்கையில் கண்டி வீதி சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டது.[1]

1835 – டெக்சசு இராணுவம் சான் அந்தோனியோவைக் கைப்பற்றியது.

1856 – ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.

1905 – பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

1911 – அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1917 – முதலாம் உலகப் போர்: எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.

1922 – போலந்தின் முதலாவது அரசுத்தலைவராக கேப்ரியல் நருத்தோவிட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1931 – இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.

1940 – இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்சு ஆகியன செருமனி, யப்பான் மீது போரை அறிவித்தன.

1946 – இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.

1948 – இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1950 – பனிப்போர்: மன்காட்டன் திட்டம் குறித்த தகவலை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கிய குற்றத்திற்காக அரி கோல்டு என்பவருக்கு 30 ஆண்டுகால சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியது.

1953 – ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.

1956 – கனடாவின் விமானம் ஒன்று பிரிட்டிசு கொலம்பியாவில் வீழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.

1961 – பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.

1973 – வட அயர்லாந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் பிரித்தானிய, அயர்லாந்து அதிகாரிகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.

1979 – பெரியம்மை தீ நுண்மம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.

1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1987 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: முதலாவது பாலத்தீன எழுச்சி காசாக்கரை, மேற்குக் கரை பகுதிகளில் ஆரம்பமானது.

1992 – அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின.

1992 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.

2003 – மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், பல காயமடைந்தனர்.

2006 – மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

2016 – மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்: வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.