• Sun. Jul 21st, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 17

Jul 17, 2021

சூலை 17 கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

180 – வடக்கு ஆப்பிரிக்காவில் சில்லியம் நகரில் (இன்றைய தூனிசியாவில்) கிறித்தவர்களாக இருந்தமைக்காக 12 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1048 – இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத் தேர்த்ந்டுக்கப்பட்டார்.

1203 – நான்காம் சிலுவைப் படையினர் கான்ஸ்டண்டினோபில் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார்.

1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1453 – நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார்.

1755 – கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 – உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார்.

1771 – இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியப் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டு மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 – பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1794 – பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப் புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

1902 – வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில் உருவாக்கினார்.

1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக “யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்” கொண்டுவரப்பட்டது.

1917 – பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.

1918 – போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.

1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1932 – நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.

1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.

1953 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.

1955 – வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

1967 – நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் “சைனஸ் மெடை” என்ற இடத்தில் மோதியது.

1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.

1973 – ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 – அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுசு விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 – கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 – கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது.

1979 – நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.[2]

1981 – அமெரிக்காவில் கேன்சசு நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.

1984 – ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.

1989 – திரு ஆட்சிப்பீடத்திற்கும் போலந்துக்கும் இடையே உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

1994 – பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தைப் பெற்றது.

1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.

1998 – பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.

1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2000 – பாட்னாவில் அலாயன்சு ஏர் வானூர்தி 7412 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அண்மித்தபோது, குடியிருப்புப் பகுதியில் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர்.[3]

2001 – சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.

2006 – இந்தோனேசியா, ஜாவாவில் 7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.

2006 – இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2014 – ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

2015 – ஈராக், தியாலாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.