• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 9

Jul 9, 2021

சூலை 9 கிரிகோரியன் ஆண்டின் 190 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 191 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 175 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

455 – இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்

869 – சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது.

1401 – தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார்.

1540 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார்.

1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் உருசியக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.

1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியனும் உருசியாவின் முதலாம் அலெக்சாந்தரும் தில்சித் நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1810 – ஒல்லாந்து இராச்சியத்தை நெப்போலியன் தனது முதலாம் பிரஞ்சு பேரரசுடன் இணைத்துக் கொண்டான்.

1816 – அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1821 – கிரேக்க விடுதலைப் போரில் உதவியமைக்காக பேராயர் கிப்பிரியானொசு உட்பட 470 முக்கிய சைப்பிரசினர் தூக்கிலிடப்பட்டனர்.

1837 – பிரித்தானிய இலங்கை, சட்டவாக்கப் பேரவையில் முதல் தடவையாக அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

1850 – பாரசீக இறைவாக்கினர் பாப் தப்ரீசு நகரில் தூக்கிலிடப்பட்டார்.

1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

1875 – உதுமானியரின் ஆட்சிக்கு எதிரான எர்சகோவினா கிளர்ச்சி ஆரம்பமானது. இது மூன்று ஆன்டுகள் நீடித்தது.

1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின.

1900 – ஆத்திரேலியக் கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆத்திரேலியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.

1900 – வெளிநாட்டு கிறித்தவ மதப்பரப்புனர்கள் 45 பேரைத் தூக்கிலிட வடக்கு சீனாவின் சான்சி மாகாண ஆளுநர் உத்தரவிட்டார்.

1903 – யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு உருவானது.

1918 – அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் உயிரிழந்தனர், 171 பேர் படுகாயமடைந்தனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தன.

1948 – பாக்கித்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.

1955 – ரசல்-ஐன்ஸ்டைன் கொள்கை விளக்க அறிக்கை அணுவாயுதங்களினால் ஏற்படும் அழிவுகளைக் குறைக்கக் கோரியது.

1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.

1956 – கிரேக்கத்தில் சைக்கிளேடு தீவுகளில் 7.7 அளவு நிலநடுக்கமும், ஏஜியன் கடலில் ஆழிப்பேரலையும் ஏற்பட்டதில் 53 பேர் உயிரிழந்தனர்.

1982 – அமெரிக்காவின் பான் ஆம் விமானம் லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 145 பேரும் தரையில் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.

1986 – நியூசிலாந்தில் ஒருபாலுறவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

1995 – யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1995 – யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2002 – ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.

2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.

2006 – 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

2006 – அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.

2011 – தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.