• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 7

Jun 7, 2021

சூன் 7 கிரிகோரியன் ஆண்டின் 158 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 159 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்


421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது.
879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார்.

1002 – இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார்.

1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது.

1494 – புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது.

1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1692 – யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர்.

1832 – கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1862 – அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஆப்பிரிக்க அடிமை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.

1863 – மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

1866 – கியூபெக்கின் பல பகுதிகளைக் கொள்ளையடித்த 1800 ஐரிய பீனியர்கள் அமெரிக்காவுக்குத் திருப்பிக் கலைக்கப்பட்டனர்.

1905 – நோர்வேயின் நாடாளுமன்றம் சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது. ஆகத்து 13 இல் நடந்த பொது வாக்கெடுப்பில் இது உறுதியானது.

1917 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 செருமானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1919 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் தேசியவாதிகளின் கலகம் வெடித்தது. பிரித்தானியப் படையினர் சுட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.

1929 – வத்திக்கான் நகரை தனிநாடாக அங்கீகரிக்கும் உடன்பாடு இத்தானிய இராச்சியத்துக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையில் ஏற்பட்டது.

1938 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனத் தேசியவாதிகளின் அரசு சப்பானிய இராணுவத்தின் முற்றுகையைத் தடுக்கும் முகமாக மஞ்சள் ஆற்றைப் பெருக்கெடுக்கச் செய்தது. 500,000 முதல் 900,000 வரை உயிரிழந்தனர்.

1940 – ஏழாம் ஆக்கோன் மன்னரும், முடிக்குரிய இளவரசர் ஒலாவும் நோர்வே அரசும் நாட்டை விட்டு வெளியேறி இலண்டனில் நாடு கடந்த நிலையில் இயங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாடு திரும்பினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அலாஸ்காவுக்கு அப்பாலுள்ள அலூசியன் தீவுகளில் உள்ள அட்டு, கிசுக்கா ஆகிய அமெரிக்கத் தீவுகளை சப்பானியப் படைகள் கைப்பற்றின.

1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாட்சி செருமனியப் படைகள் கொன்றனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: 350 கிரீட்டிய யூதர்களையும் 250 கிரீட்டிய சார்பாளர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் கிரேக்கத்தின் சந்தோரினி தீவுக்கு அருகில் மூழ்கியதில் கப்பலில் அனைவரும் உயிரிழந்தனர்.

1946 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிபிசி தொலைக்காட்சி சேவை ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

1948 – செக்கோசிலோவாக்கியாவின் அரசுத்தலைவர் எட்வர்டு பெனெசு தனது நாட்டை கம்யூனிச நாடாக மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்து பதவியில் இருந்து விலகினார்.

1962 – அல்ஜியர்ஸ் பல்கலைக்கழக நூலகக் கட்டடம் வலதுசாரித் தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்டதில், 500,000 இற்கும் அதிகமான நூல்கள் எரிந்தன.

1967 – ஆறு நாள் போர்: இசுரேலியப் படைகள் எருசலேமினுள் நுழைந்தன.

1977 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வெள்ளி விழா நிகழ்வுகளை 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்வையிட்டனர்.

1981 – இசுரேலிய வான்படை ஈராக்கிய ஒசிராக் அணுக்கரு உலையை ஒப்பேரா நடவடிக்கையின் போது குண்டுவீசி அழித்தது.

1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 187 பேரில் 176 பேர் உயிரிழந்தனர்.

1991 – பிலிப்பீன்சில் பினட்டூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.

2000 – இசுரேல், லெபனான் ஆகியவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டை ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்தது.

2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – ஈழப்போர்: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

2013 – சீனாவின் சியாமென் நகரில் பேருந்து ஒன்று தீப்பற்றியதில் 47 பேர் உயிரிழந்தனர்.

2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசில், தெற்கு கீவு மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 37 பேர் கொல்லப்பட்டனர்.