• Mon. Jul 22nd, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 3

Nov 3, 2021

நவம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

361 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார்.

644 – இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார்.

1333 – ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது.

1492 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1493 – கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார்.

1534 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.

1783 – அமெரிக்க விடுதலைப் படை கலைக்கப்பட்டது.

1789 – அமெரிக்காவின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.

1793 – பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கூசு தலைதுண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1812 – நெப்போலியனின் இராணுவத்தினர் வியாசுமா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.

1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

1848 – நெதர்லாந்தில் இட்ச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

1903 – ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1905 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டார்.

1918 – செருமனி கடற்படையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 40,000 மாலுமிகள் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.

1930 – பிரேசிலில் அக்டோபர் 24 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கெட்டூலியோ வார்கசு இடைக்கால அரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1936 – பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வில்லெம்சாவென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

1956 – சூயெசு நெருக்கடி: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எகிப்தியக் கட்டுப்பாட்டில் இருந்த காசாவில் தாக்குதல் நடத்தியதில் 275 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

1956 – அங்கேரியப் புரட்சி: தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் அல்லாத கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய புதிய அங்கேரிய அரசு நிறுவப்பட்டது. இதே வேளையில் மாஸ்கோவில் யானோசு காதார் தலைமையில் சோவியத்-ஆதரவு அங்கேரிய அரசு அமைக்கப்பட்டது.

1957 – இசுப்புட்னிக் திட்டம்: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.

1963 – தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது.

1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1964 – வாசிங்டன், டி. சி. மக்கள் முதன் முறையாக அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1973 – மரைனர் திட்டம்: நாசா மரைனர் 10 என்ற விண்கலத்தை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் புதனை அடைந்து அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் என்ற சாதனையைப் பெற்றது.

1975 – சேக் முசிபுர் ரகுமானின் ஆதரவாளர்கள் உட்படப் பல வங்காளதேச அரசியல்வாதிகள் டாக்கா மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

1978 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் கம்யூனிசத் தொழிலாளர் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் கிளான் மற்றும் நியோநாட்சி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1982 – ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1986 – மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1988 – இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளிகளினால் மாலை தீவுகள் அரசைக் கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

1997 – மனித உரிமை மீறல்களுக்காகவும், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் சூடான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

2014 – உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது.