• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 5

Nov 5, 2021

நவம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.

1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.

1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.

1605 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.

1688 – இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.

1757 – ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார்.

1795 – இலங்கையின் வடமேற்கே கற்பிட்டி நகரை சேர் ஜோன் பௌசர் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.[2]

1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.

1862 – அமெரிக்கா, மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1872 – அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய சூசன் பிரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.

1895 – தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.

1898 – பிலிப்பீன்சு, நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர்.

1911 – செப்டம்பர் 29 இல் உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போரை அறிவித்த இத்தாலி திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1912 – ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1914 – முதலாம் உலகப் போர்: பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.

1916 – போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.

1916 – வாசிங்டன், எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1917 – விளாதிமிர் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

1917 – அக்டோபர் புரட்சி: எசுத்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.

1925 – சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய சைராணுவ சரக்குக் கப்பல் யார்விசு பே செருமனியின் போர்க்கப்பலால் தாக்கப்பட்டு மூழகடிக்கப்பட்டது.

1940 – பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.

1943 – இரண்டாம் உலகப் போர்: வத்திக்கான் மீது தாக்குதல் தொடங்கியது.

1945 – சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.

1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1970 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கப் படையினரின் ஒரு வார உயிரிழப்புகள் (24) கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என வியட்நாம் இராணுவ உதவிக் கட்டளையகம் அறிவித்தது.

1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.

1995 – கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.

1996 – பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.

1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

2006 – 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.

2009 – டெக்சசு மாநிலத்தில் அமெரிக்க இராணுவ மேஜர் நைடல் மாலிக் அசனின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 காயமடைந்தனர்.

2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.

2017 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் கிறித்தவக் கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 26 கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் காயமடைந்தனர்.