• Mon. Jul 22nd, 2024

வரலாற்றில் இன்று செப்டம்பர் 2

Sep 2, 2021

செப்டம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 245 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 246 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 44 – எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள்.

கிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.

1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1649 – காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது.

1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.

1752 – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

1792 – பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று உரோமைக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.

1806 – சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலசரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.

1807 – நெப்போலியனிடம் டென்மார்க் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பிரித்தானிய அரசக் கடற்படை கோபனாவன் நகர் மீது எரி குண்டுகளை வீசின.

1856 – சீனாவின் நாஞ்சிங்கில் சிங் ஆட்சிக் காலத்தில் தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் உட்பட 27,000 பேர் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் அக்டோபர் வரை நீடித்தது.

1862 – யாழ்ப்பாணத்தில் ஜாஃப்னா ஃபிறீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியானது.

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.

1870 – பிரான்சில் ‘செடான்’ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் புருசியப் படையினர் மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.

1885 – அமெரிக்காவில் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.

1898 – பிரித்தானிய, எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை நிலைநாட்டினர்.

1935 – வெப்ப மண்டலச் சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியதில், புளோரிடா மாநிலத்தில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1945 – இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. சப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் “மிசூரி” என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.

1945 – வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

1946 – பிரித்தானிய இந்தியாவில் சவகர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

1951 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

1957 – தென் வியட்நாம் அரசுத்தலைவர் நியோ தின் தியெம் ஆத்திரேலியாவுக்கு அரசுமுரைப் பயணம் மேற்கொண்டார். இவரே ஆத்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட வெளிநாடொன்றின் முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.

1958 – அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1960 – திபெத்திய வரலாற்றில் முதல்தடவையாக மத்திய திபெத்திய நிருவாகத்தின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்றது. இந்நாளை அவர்கள் ‘சனநாயக நாள்’ எனக் கொண்டாடுகிறார்கள்.

1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்லோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

1984 – ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இரு குழுக்கலிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 12 பேர் காயமடைந்தனர்.

1985 – ஈழப்போர்: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம், வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ்க் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1988 – இந்திய-இலங்கை ஒப்பந்தம்

1987: இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட-கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.

1990 – மல்தோவாவின் ஒரு பகுதியான திரான்சுனிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

1992 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற 7.7 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

1996 – பிலிப்பீன்சு அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1998 – ஐநாவின் ருவாண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ருவாண்டாவின் சிறியநகரம் ஒன்றின் முன்னாள் நகரத்தந்தை சாந்பவும் அக்கயெசு என்பவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் 9 குற்றஙளுக்குக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தது.

1998 – நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் உயிரிழந்தனர்.

2006 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

2009 – கர்னூல், ஆந்திரப் பிரதேசம், கர்னூலில் இருந்து 74 கிமீ தூரத்தில் உலங்கு வானூர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

2010 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலிய-பலத்தீன அமைதிப் பேச்சுகக்ளை அமெரிக்கா ஆரம்பித்தது.

2018 – பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது. அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.