• Fri. Mar 29th, 2024

அமெரிக்காவில் தாயை சுட்டுக் கொன்ற பச்சிளம் குழந்தை!

Aug 13, 2021

அமெரிக்காவில் பச்சிளம் குழந்தை ஒன்று தாயை சுட்டுக் கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தனது குழந்தையை விளையாட விட்ட தாய், வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார். வேலை தொடர்பாக அவர் வீடியோ அழைப்பில் மும்முரமாக இருந்தார்.

அப்போது, தளிர்நடை பயிலும் குழந்தைக்கு குண்டுகள் நிரம்பிய கைத்துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டு விட்டது. வீடியோ வேலை அழைப்பில் இருந்த 21 வயது தாயின் தலையில் குண்டு பாய்ந்தது.

அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட்டது. தாயை சுட்ட குழந்தை, அவர் கீழே விழுந்த பிறகும் துப்பாக்கியை கையில் வைத்திருந்தது.

இறந்து விழுந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தவர் நேரலையாக இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனாலும், உடனே சுதாரித்துக் கொண்டு 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து விஷயத்தை சொல்லிட்டார்.

புளோரிடாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வேலை தொடர்பான வீடியோ அழைப்பில் இருந்த அவளது தாயை, குழந்தை சுட்டுக் கொன்றதாக மத்திய போலீசார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

ஷமயா லின் என அடையாளம் காணப்பட்ட அந்த 21 வயதான பெண், தலையில் குண்டு பாய்ந்ததும் பின்புறமாக விழுந்துவிட்டார். அதன்பிறகு அவர் வீடியோ அழைப்புக்கு திரும்பவில்லை என்று, அந்த பெண்ணுடன் வீடியோவில் பேசிக் கொண்டிருந்த நபர் தெரிவித்தார்.

தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது என்பது கவலையளித்த நிலையில், தற்போது ஒன்றுமே தெரியாத குழந்தையின் கையில் அசல் துப்பாக்கி கிடைத்ததால் ஏற்பட்ட விபரீதம் அனைவரையும் பதறச் செய்திருக்கிறது.