• Fri. May 9th, 2025

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

Jun 6, 2021

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி முதல் தளர்த்துவது குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது.

எனினும், கடந்த 2 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று நேற்று முன் தினம்(04) பதிவு செய்யப்பட்டது. அன்று மட்டும் 6,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில் அரசு அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

’திட்டமிட்டபடி 21-ஆம் தேதி முழு ஊரடங்கு தளர்த்தப்படும். அப்போது, முகக் கவசம், வீடுகளிலிருந்து பணியாற்றுவது போன்ற கட்டுப்பாடுகளைத் தொடர்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்றார்.