• Tue. Apr 23rd, 2024

சென்னை சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம்

Jul 10, 2021

தமிழகத்தில் சென்னையில் உள்ள லெஜண்ட் சரவணா ஸ்டோருக்கு 3 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அபராதத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதித்ததாகவும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் நாளை முதல் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.