• Tue. Mar 26th, 2024

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய தங்கட்டி

Oct 13, 2021

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நேற்று சென்னை வந்த ஒரு ஆண் பயணி, தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், விமான நிலைய சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன் போது அந்த நபர், மொத்தம் 1170 கிராம் தங்கம் கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஒரு தங்கக்கட்டி மட்டும் சுமார் 1 கிலோ எடை கொண்டதாகவும், ரூ.51.36 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பயணி கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.