• Fri. Jul 26th, 2024

இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

Jun 25, 2021

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவிலிமேடு பகுதியில் தங்கி வேலைசெய்து வரும் கோபி – மாலதி தம்பதிக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மஞ்சட்காமாலை தடுப்பூசி போட்டுள்ளனர்.

அதன்பிறகு அடுத்த நாள் தோல் தடுப்பூசி போட்டனர். இதன் தொடர்ச்சியாக தடுப்பூசி போடப்பட்ட மூன்றுமணி நேரத்தில் குழந்தை மயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தை உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கூறினர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். பிறந்த குழந்தைக்கு 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 தடுப்பூசி போடப்பட்டதன் விளைவாகவே உயிரிழந்துவிட்டது என பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே உயிரிழப்புக்கான உண்மை தெரியவரும் எனக் போலீசார் கூறியுள்ளனர்.