• Wed. Oct 23rd, 2024

தமிழகத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸாருக்கு நேர்ந்த கதி; வேடிக்கை பார்த்த மக்கள்

Jun 24, 2021

தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற காவலர் மீது போதை ஆசாமி ஒருவன் சாக்கடையை அள்ளி வீசியதோடு ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவன், குடித்துவிட்டு குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்த தகவல் அறிந்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய காவலர் பாலகிருஷ்ணன் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மதுபோதையில் இருந்த அசோகன் காவலரை ஆபாசமாக திட்டிய போது காவலர் கையை ஓங்கவே, அவன் பதிலுக்கு சாக்கடையை அள்ளி வீசினான்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்த நிலையில், போதை தலைக்கேறிய ஆசாமி, காவலரை அடிக்கப் பாய்ந்ததோடு அவரது தலைக்கவசத்தை தூக்கி எறிந்து அலப்பறை செய்தான்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.