• Tue. Dec 5th, 2023

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்; இராணுவ தளபதி அறிவுறுத்து

Aug 17, 2021

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பொது மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்குமாறு பொதுமக்களிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை வரவழைக்க மட்டுமே பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.