• Sun. Jan 19th, 2025

இன்று முதல் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

Aug 17, 2021

இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.