• Fri. Apr 19th, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Dec 9, 2021

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டிலுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலற்ற நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையோரால் புதிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்திற்காக இவ்வாறானதொரு சக்தி உருவாக வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய கட்சி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 மாதங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் ஒரு வலுவான அரசியல் சக்தியாக மாறும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.