• Mon. Jul 22nd, 2024

பார்வையாளர் கட்டணங்கள் அதிகரிப்பு

Mar 9, 2022

தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் மிருகக்காட்சிசாலைகளின் பராமரிப்பு நடவடிக்கைகளை உரியமுறையில் நடத்திச் செல்லும் நோக்கில், மிருகக்காட்சிசாலை பார்வையாளர் கட்டணங்களை திருத்தம் செய்ய திறைசேறி தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

மிருகங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்தல், அந்நிய செலாவணி பிரச்சினை போன்றவை காரணமாக, இந்த கட்டணத் திருத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் சபாரி மற்றும் மிருகக்காட்சிசாலைகளுக்கான பார்வையாளர் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டணத் திருத்தமானது, நேற்று முன்தினத்திலிருந்து (07) அமுலுக்கு வருவதாகவும் தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.