• Sun. Sep 8th, 2024

இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Aug 21, 2021

கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,099 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,884 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கோவிட் தொற்று உறுதியான மேலும் 2,785 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 384,597 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,580 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323,390 ஆக அதிகரித்துள்ளது.