• Tue. Mar 26th, 2024

காணாமல்போன 4 வயது சிறுமி 18 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!

Nov 3, 2021

அவுஸ்திரேலியாவில் 18 நாட்களாக காணாமல்போன 4 வயது சிறுமி நன்கு பூட்டப்பட்ட வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 16 ஆம் திகதி மேற்கு அவுஸ்திரேலியாவில் கார்னார்வோன் நகருக்கு அருகில் உள்ள ஒரு முகாம் பகுதியில் கிளியோ ஸ்மித் என்ற சிறுமி தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போனார்,

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கிளியோ ஸ்மித் கூடாரத்தில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டு இருந்தாள்.

கூடாரத்தின் இரண்டாவது அறையில் உறங்கி கொண்டிருந்த அவரது தயார் காலையில் எழுந்தபோது, கிளியோவை காணவில்லை. கூடாரத்தின் கதவு திறந்திருந்தது.

இந்நிலையில் பொலிஸில் கிளியோ காணமல் போயுள்ளதாக பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

கிளியோ தானாக கூடாரத்தை விட்டு வெளியேறி இருக்க மாட்டாள் என தாய் கூறியதை அடுத்து கடத்தல் அச்சம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாநிலத் தலைநகரான பேர்த்தில் இருந்து 100 அதிகாரிகள் கொண்ட பணிக்குழு பாரிய வான், தரை மற்றும் கடல் வழியாக தேடுதலில் ஈடுபட்டனர்.

சனத்தொகை குறைவாக உள்ள பகுதிகளில் தேடல் நடவடிக்கைக்கு உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

கிளியோவின் இருப்பிடம் பற்றிய தெரிவித்தால் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதியாக கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு கிளியோ இருக்கும் இருப்பிடத்தை அறிந்து பொலிஸார் அங்கு சென்றனர்.

குறித்த வீட்டில் ஒரு அறையில் கிளியோ இருந்துள்ளாள். அவளை தூக்கி உனது பெயர் என்ன என்று கேட்டபோது அவள் கிளியோ என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவள் காப்பாற்றப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாள். கிளியோ மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறாள்.

கிளியோவை கடத்தி வைத்திருந்த வீட்டில் வசித்த ஒருவர் சமீபத்தில் நாப்கின் வாங்குவதை அண்டை வீட்டுக்காரர் பார்த்ததாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையிலேயே கிளியோ கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளாள். கிளியோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பொது மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.

விளக்கமறியிலில் உள்ளவருக்கு கிளியோ ஸ்மித் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

சுமார் 5,000 பேர் வசிக்கும் கார்னார்வோனில் உள்ள அவரது குடும்ப வீட்டிலிருந்து கிளியோ கண்டுபிடிக்கப்பட்ட வீடு ஆறு நிமிட பயணத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.