ஆகத்து 31 கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.
1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.
1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.
1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.
1782 – திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர்.
1795 – முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.
1858 – பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.
1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.
1918 – முதலாம் உலகப் போர்: நூறு நாட்கள் குற்றம்: ஆத்திரேலியப் படைகள் செயிண்ட்-குவெண்டின் மலைப் போரில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டன.
1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
1940 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செர்பியத் துணை இராணுவப் படைகள் செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.
1945 – ஆத்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1949 – அல்பேனியாவில் கிரேக்க சனநாயக இராணுவம் பின்வாங்கியது. கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.
1958 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1963 – வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.
1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.
1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் உயிரிழந்தனர்.
1987 – தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.
1993 – உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.
1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
1997 – வேல்சு இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.
1998 – வட கொரியா தனது முதலாவது செயற்கைக்கோளை ஏவியது.
1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர்.
1999 – மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் காயமடைந்தனர்.
2005 – பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.
2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.
2011 – திக்குவல்லை கலவரம்: முசுலிம்களின் நோன்புப் பெருநாளன்று இலங்கையில் தென்மாகாணத்தில், திக்குவல்லை எனும் இடத்தில் முசுலிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் மூண்டது.
2016 – பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானித்ததில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.